தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை
x

காதல் விவகாரத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்

காதல் விவகாரத்தில் தூக்குப்போட்டு பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரிலுள்ள மாணவி காரைக்காலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டுக்கு தெரியவரவே அவரது தாயார் ஊர் பஞ்சாயத்தாரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து பஞ்சாயத்தார், அந்த வாலிபரை அழைத்து மாணவியிடம் பேசக்கூடாது என்று கண்டித்து எழுதி வாங்கி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மாணவியிடம், அந்த வாலிபர் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட பொதுமக்கள் கண்டித்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

மேலும் அந்த வாலிபரின் பெற்றோர் அவரை திட்டி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால் வேதனை அடைந்த மாணவி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story