பிளஸ்-2 மாணவி கடத்தல்?


பிளஸ்-2 மாணவி கடத்தல்?
x

பிளஸ்-2 மாணவி கடத்தல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனை

திருக்கனூர் அருகே மண்ணாடிப்பட்டு கிழக்கு வீதியை சேர்ந்தவர் சர்வேசன் (வயது 48). இவரது மகள் நந்தினி. இவர் மண்ணாடிப்பட்டு அரசு மேல்நிலைப்பளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கீர்த்திகா என்.சி.சி. வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினியை யாரேனும் கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்டார்கோவில் சின்னபேட் பகுதியை சேர்ந்தவர் பால தண்டாயுதபாணி (46). அவரது மகன் சாரதி (17). தாகூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை தந்தை பாலதண்டாயுதபாணி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சாரதி வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்தை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story