முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சேரியில் முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

கியாஸ் விலை உயர்வினை வாபஸ்பெற வேண்டும், மகளிர் ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், அக்னிபத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் உழவர்கரை நகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டததுக்கு துணைத் தலைவி மீனாட்சி தலைமை தாங்கினார். கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பாரிஜாதவள்ளி, விஜயா, உமா மகேஸ்வரி, ஜான்சிராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story