புதுவை, காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை


புதுவை, காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை
x

தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் புதுவை, காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை. வெளி மாநிலங்களுக்கும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

புதுச்சேரி

தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால் புதுவை, காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை. வெளி மாநிலங்களுக்கும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

டைமிங் பிரச்சினை

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக டைமிங் பிரச்சினை காரணமாக பி.ஆர்.டி.சி. பஸ் ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர். இந்தநிலையில் இன்று மதியம் புதுவையில் இருந்து முத்தியால்பேட்டை நோக்கி பி.ஆர்.டி.சி. மினி பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் சிவலிங்கம் ஓட்டினார்.

அப்போது அங்கு வந்த ஒரு தனியார் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் இணைந்து சிவலிங்கத்திடம் டைமிங் பிரச்சினையை காரணம் காட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவலிங்கம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பி.ஆர்.டி.சி. டிரைவர், கண்டக்டர்கள் தாக்கப்பட்டனர்.

பஸ்கள் ஓடவில்லை

இந்தநிலையில் புதுவை பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் மீது தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுவையில் இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் ஓடவில்லை. பஸ்கள் அனைத்தும் புதுவை பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதேபோல் சென்னை, திருப்பதி, பெங்களூரு, மாகி, குமுளி ஆகிய வெளி மாநில பகுதிகளுக்கும் பி.ஆர்.டி.சி. பஸ்கள் ஓடவில்லை. இதேபோல் காரைக்காலிலும் பி.ஆர்.டி.சி.பஸ்கள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story