வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலம் மீட்பு


வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலம் மீட்பு
x

திருநள்ளாறு அத்திப்படுகை வாய்க்காலில் வீசப்பட்ட பெண் சிசு சடலத்தை மீட்டனா்.

காரைக்கால்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அத்திப்படுகை கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகில், கழிவுநீர் வாய்க்காலில் பெண் சிசு சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.தொப்புள் கொடிகூட அறுக்காத நிலையில் கிடந்ததால் பிறந்து சில மணி நேரத்தில் அதை பெற்ற தாய் வீசியிருக்கலாம் என கருதப்படுகிறது.

தகவல் அறிந்து திருநள்ளாறு போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று பெண் சிசு உடலை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறந்த குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என்றும், உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் திருநள்ளாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story