புதுப்பிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


புதுப்பிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
x

புதுப்பிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அங்குள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் இளைஞர் மன்ற வளாகத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதன்பிறகு சரிவர பராமரிக்காததால் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரிடம், அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தார். பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று முதல் அந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பொது மக்கள், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story