ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 3 மாதம் சிறை


ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 3 மாதம் சிறை
x

ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 3 மாதம் சிறை தண்டனை புதுவை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி

புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரோக்கியநாதன் (வயது 76). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் குழுவின் தலைவராக இருந்த வித்யா ராம்குமார் குறித்து சமூக வலைதளத்தில் இழிவான கருத்துக்களை பதிவிட்டார். இது குறித்து அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவில் குற்றம் சாட்டப்பட்ட ஆரோக்கிய நாதனுக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரவீன்குமார் ஆஜரானார்.


Next Story