அடுக்குமாடி குடியிருப்பில் சிவசங்கர் எம்.எல்.ஏ.ஆய்வு


அடுக்குமாடி குடியிருப்பில் சிவசங்கர் எம்.எல்.ஏ.ஆய்வு
x

புதுச்சேரி, உழவர்கரை தொகுதி சரவணன் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகப் புகார் - எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆய்வு

புதுச்சேரி

புதுச்சேரி, உழவர்கரை தொகுதியில் உள்ள லாம்பார்ட் சரவணன் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரை சந்தித்து முறையிட்டனர். உடனே அவர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

அப்போது அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதியில் ஏற்படும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளை தீர்க்க போலீஸ் பூத் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனே போலீசார் லாம்பர்ட் சரவணன் நகர் பகுதியில் போலீஸ் பூத் அமைக்க நடவடிககை எடுத்து மக்களின் அச்சத்தை போக்குவதாக உறுதியளித்தனர்.


Next Story