தொழிலாளி திடீர் சாவு


தொழிலாளி திடீர் சாவு
x

லாரியில் உறங்கிய தொழிலாளி தீடிரென இறந்துபோனார்.

திருக்கனூர்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் சுரேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 41). இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த லாரியை தினமும் இரவு திருக்கனூர் கடை வீதியில் உள்ள ஒரு ஆயில் மில் எதிரே நிறுத்துவது வழக்கம். இந்தநிலையில் நேற்று இரவு அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியின் இருக்கையில் ஜெயக்குமார் படுத்து உறங்கினார். காலையில் பார்த்தபோது, இருக்கையின் கீழே ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருக்கனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடிபோதையில் இருக்கையில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உண்மையான காரணம் குறித்து தெரியவரும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story