காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்


காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
x

அரியாங்குப்பத்தில் வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுகுமாறன். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இளைய மகள் பத்மபிரியா (வயது22). இவர் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை கேட்டு வருவதாக பத்மபிரியா தனது தாயாரிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. மகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை.

இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து பத்மபிரியாவே தாயார் ஜெயந்தியின் செல்போனுக்கு, 'சாமி படம் முன்பு ஒரு கடிதம் வைத்துள்ளேன், அதனை எடுத்துப் படித்துப் பாருங்கள்' என எஸ்.எம்.எஸ். அனுப்பிவிட்டு சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

அதன்படி கடிதத்தை எடுத்து பார்த்தபோது அதில் 'தான் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அவரையே பதிவு திருமணம் செய்து கொண்டு அவருடன் சென்று விட்டதாகவும்' எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து தவளக்குப்பம் போலீசில் தந்தை சுகுமாறன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து காதலனுடன் சென்ற இளம்பெண்ணை தேடி வருகிறார்.


Next Story