கொரோனா தொற்று எண்ணிக்கை 128 ஆக உயர்வு


கொரோனா தொற்று எண்ணிக்கை 128 ஆக உயர்வு
x

புதுவயைில் புதிதாக 21 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் புதுவையில் 18 பேரும், காரைக்காலில் ஒருவரும், ஏனாமில் 2 பேரும் அடங்குவர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 4 பேரும், வீடுகளில் 124 பேரும் என மொத்தம் 128 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்று 270 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1,352 பேர் 2-வது தவணை தடுப்பூசியும், 498 பேர் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 30 ஆயிரத்து 568 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


Next Story