புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டியது


புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300-ஐ தாண்டியது
x

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் ஒரே நாளில் 80 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது.

கிடுகிடு உயர்வு

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையிலும் தொற்று பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 44 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அது இரண்டு மடங்காக உயர்ந்தது. ஒரே நாளில் 80 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

304 பேருக்கு சிகிச்சை

இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,804 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 80 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் புதுச்சேரியையும், 12 பேர் காரைக்காலையும், 6 பேர் ஏனாமையும், 2 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் 6 பேர், வீடுகளில் 298 பேர் என 304 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 23 பேர் குணமடைந்தனர். புதுவையில் தொற்று பாதிப்பு 4.43 சதவீதமாகவும், குணமடைவது 98.64 சதவீதமாகவும் உள்ளது.

தடுப்பூசி

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 122 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 536 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 206 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 17 லட்சத்து 41 ஆயிரத்து 583 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.


Next Story