அலுமினிய பொருள் திருட்டு


அலுமினிய பொருள் திருட்டு
x

திருபுவனை அருகே திருவண்டார் கோவிலில் ஒரு தனியார் தொழிற்சாலையில் கண்ணாடி கதவை உடைத்து அலுமினியப் பொருட்கள் திருட்டு. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

திருபுவனை

திருபுவனை அருகே திருவண்டார் கோவிலில் ஒரு தனியார் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் மூடி இருந்தது. ஆனாலும், அங்கு இரவு ஷிப்டில் 2 காவலாளிகளும், பகல் ஷிப்டில் ஒரு காவலாளியும் பணிபுரிந்து வருகிறார்கள்.

நேற்று இரவு தொழிற்சாலையில் ஏதோ உடைக்கப்படும் சத்தம் கேட்டது. காவலாளிகள் தொழிற்சாலையில் இருந்து சத்தம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு தொழிற்சாலையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு அலுமினிய பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து காவலாளி முருகேசன், திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story