கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் முற்றுகையிட்டனர்.

பாகூர்

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் முற்றுகையிட்டனர்.

மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி

பாகூர் பழைய காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). கைப்பந்து பயிற்சியாளர். இவரிடம், புதுவை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கிராம பகுதியில் இருந்து வந்த மாணவி ஒருவருக்கு செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இந்த நிலையில் புகார் கொடுத்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நேற்று பாகூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் தசரதா, துணைச் செயலாளர் சரோஜா, பாகூர் மக்கள் நல இயக்க பொன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நேற்றுமுன்தினம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story