கடலில் மூழ்கிய வாலிபர் கதி என்ன?


கடலில் மூழ்கிய வாலிபர் கதி என்ன?
x

காலாப்பட்டு

காலாப்பட்டு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் விக்னேஷ் (வயது 18). இவர், அதே பகுதியை சே்ாந்த சக நண்பர்களுடன் அங்குள்ள கடற்கரையில் கால்பந்து விளையாடினார். அப்போது பந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த பந்தை எடுப்பதற்காக விக்னேஷ் கடலில் நீந்தி சென்றுள்ளார். அப்போது எழுந்த ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. கடலில் மூழ்கிய அவரது கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story