திண்டுக்கல்: மெடிக்கலில் போதை மருந்து, மாத்திரைகள் விற்பனை: வாலிபர் கைது

ஆரிப் அகமது என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்: மெடிக்கலில் போதை மருந்து,  மாத்திரைகள் விற்பனை: வாலிபர் கைது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து துணைக்காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கிழக்கு ரத வீதியில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் சட்டவிரோதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தரக்கூடிய போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்த திண்டுக்கல், நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப் அகமது(32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com