கரூர் துயரம்: எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை - முதல்-அமைச்சர்


கரூர் துயரம்: எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்தி பலிகடா ஆக்குவது நோக்கம் இல்லை - முதல்-அமைச்சர்
x
தினத்தந்தி 15 Oct 2025 3:56 PM IST (Updated: 15 Oct 2025 4:17 PM IST)
t-max-icont-min-icon

அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story