நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநரைச் சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
நெல்லையில் கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Published on

நெல்லை,

திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம் தெற்கு, சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெள்ளபாண்டி மகன் மணி (வயது 38) என்பவர், நெல்லை மாநகர பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

அதைத் தொடர்ந்து பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி இன்று மணி என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com