சீனாவில் கொரோனாவை போல் பரவ தொடங்கிய புதிய வைரஸ்!

கோவிட் பெருந்தொற்றை தொடர்ந்து தற்போது சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுகின்றன.

எச்.எம்.பி.வி என்பது சுவாச ஒத்திசைவு வைரஸ் ( respiratory syncytial virus) (RSV), மீசிலெஸ், மம்ஸ் போன் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. எச்.எம்.பி.வி என்பது சுவாச தொற்றுநோய் வைரஸ் ஆகும்.

நோய் அறிகுறிகள் :

எச்.எம்.பி.வி-யின் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.

நோய் பரவும் முறை:

மற்ற வைரஸ்களைப் போலவே மனித மெட்டாப் நியூமோ வைரஸும் பரவுகிறது.

இருமல், தும்மல் மூலம் பரவுகிறது. கைக்குலுக்குதல் மற்றும் தொடுதல் மூலமும் பரவுகிறது.

சுத்தமற்ற பகுதிகளில் கையை வைத்துவிட்டு பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவுகிறது.

இந்த வைரஸால் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையவர்கள் எளிதாக பாதிக்கப்படுகின்றனர்.

நோய் தடுப்பு முறை:

குறைந்தது 20 விநாடிகள் சோப்பு போட்டு கையை கழுவ வேண்டும். கைக்கழுவாமல் முகத்தை தொடக்கூடாது.

நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

நாம் அடிக்கடி தொடும் கதவு கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.