தேவையான பொருட்கள் : சிக்கன் - 250 கிராம், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு.. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், பிரியாணி இலை - 1, பட்டை - 1/4 இன்ச், கிராம்பு - 2, ஏலக்காய் - 1, கறிவேப்பிலை - சிறிது, பூண்டு - 6 பற்கள்
செய்முறை : தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்கு கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியா வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாயை போட்டு லேசாக வதக்க வேண்டும்.
பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, வறுத்து ஆறவைத்து அத்துடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் பூண்டு, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட்டை ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி, உப்பு தூவி 7 நிமிடம் வதக்கிய, பின் 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் ஊற்றி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொத்தமல்லியைத் தூவினால், சிக்கன் குருமா ரெடி!!!