தேவையான பொருள்கள் : நண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, நல்லெண்ணெய், சோம்பு ஆகியவை.
முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.
பின் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் மிளகாய்த்தூளை கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும். பிறகு அதில் கால் டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.
தண்ணீர் முழுவதும் வற்றி, நண்டு வெந்து வாசனை வந்த பிறகு இறக்கவும். நண்டு விரைவில் வெந்து விடும். நண்டு வறுவல் ரெடி.