சுற்றுலாத் தலமாக மாறிய பிரமாண்டமான நினைவிடங்கள்!

சுற்றுலாத் தலமாக மாறிய பிரமாண்டமான நினைவிடங்கள்!

Published on
தாஜ்மஹால், ஆக்ரா: 'இந்தியாவின் பளிங்கு அற்புதம்' என்று வர்ணிக்கப்படும் தாஜ்மஹால், முகலாய கட்டிடக்கலையின் சிறந்த கட்டுமானங்களில் ஒன்றாகும்.
தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக 1631-முதல் 1648-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஷாஜஹானால் இது கட்டப்பட்டது.
கிசா பிரமிடுகள்: எகிப்தின் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களை உள்ளடக்கிய மிகப்பெரிய பிரமிடுகள் இதுவாகும்.
பிரமிடுக்குள் செல்வதற்கும் வெளியே வருவதற்கும் சிறிய சுரங்கப் பாதைகள் இருக்கின்றன. கிசா பிரமிடுக்கு அருகே இன்னும் 2 பிரமிடுகள் இருக்கின்றன.
ஹுமாயூன், டெல்லி: முகலாய பேரரசர் ஹுமாயூன் நினைவிடம் 1570-களில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் முதல் தோட்ட கல்லறையாகும். இது டெல்லியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
150-க்கும் மேற்பட்ட முகலாய குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்டிருப்பதால் இந்த இடம் 'முகலாயர்களின் தங்குமிடம்' என்றும் அழைக்கப்படுகிறது.
ஷா-இ-ஜிந்தா, உஸ்பெகிஸ்தான்: உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் அமைந்துள்ள பிரபலமான நினைவிடங்களில் இதுவும் ஒன்றாகும். ஷா-இ-ஜிந்தா என்றால் வாழும் ராஜா என்று பொருள்.
முஹம்மது நபியின் உறவினரான குத்தம் இப்னு அப்பாஸ் இங்கு அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நினைவிடம் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இடமாக விளங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com