ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு உள் மட்டும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருவதுண்டு.
இந்த தாக்குதல் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் அந்த பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டஸ் பிரண்ட் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்துள்ளனர். மேலும் மதத்தின் அடிப்படையிலும் தாக்குதல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது. மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் நீர்வளத்துறைக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்தியா வந்து சேருமாறும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்காப்புக்காக தங்கள் ராணுவத்தையும் தயார் நிலையில் இருக்குமாறு பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு கடற்படையினரும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.