தூத்துக்குடி, திருநெல்வேலி கார்த்திகை தீபம் ஸ்பெஷல்.. பனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி?
கார்த்திகை தீபத்திற்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரபலம். இன்று இந்த கொழுக்கட்டையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : பச்சரிசி, கருப்பட்டி, ஏலக்காய், துருவிய தேங்காய், பனை ஓலை
முதலில் ஏலக்காயை பொடித்து கொள்ளவும். பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
கடாயை காயவைத்து துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
பின்னர் கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும்.
பின்னர் இறக்கி வடிகட்டி, மாவுடன் பிசையவும். ஓலையை அரை அடி நீளத்திற்கு நறுக்கி கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறிதளவு எடுத்து ஒரு ஓலையில் நடுவில் வைத்து மற்றொரு ஓலையால் மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.
செய்து வைத்தவைகளை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.