இன்றைய ராசிபலன் - 14.01.2025!

மேஷம்: அரசாஙகத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. காதலர்கள் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தங்கள் மகன் இன்னும் நிரந்தரமான வருவாய் அமைய வில்லை என்று ஏங்கிய பெற்றோர்களுக்கு மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ரிஷபம்: பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிட்டும். மேலதிகாரிகள் மத்தியில் உங்களுக்கு நல்ல மரியாதை இருக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்: விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள்.

கடகம்: வேலைக்கு செல்பவர்ள் தங்கள் அலுவலகத்தில் அநாவசியப் பேச்சை நிறுத்தி விடுவது தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். பயணங்களும் அதிகரிக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும்.

சிம்மம்: உறவினர்கள் வருகை உண்டு. தம்பதிகளிடையே அன்பு பலப்படும். எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும். மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். விவேகமுடன் செயல்பட்டு வெற்றியைக் குவிப்பீர்கள். திருமண விசயத்தில் உறவினர் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி: தேக ஆரோக்கியம் மேம்படும். உங்கள் உறவினர்களால் பெரிதும் மதிக்கப்படுவர். செலவு கூடுதலாகும். சிக்கனம் தேவை. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகும். அசாத்தியமான விசயங்களை சட்டென்று முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நல்ல காரியத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விரும்பிய பதவி கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக அமையும்.

விருச்சிகம்: கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

தனுசு: மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

மகரம்: மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து முடிப்பர். புத்திரர்களால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகம் இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

கும்பம்: தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம். சிக்கனம் தேவை. சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் கொடுக்க வேண்டாம்.

மீனம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர். உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்னை வர வாய்ப்பில்லை.