கோவை மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இது முருகப்பெருமானின் 7-வது படைவீடு என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது.
இதையொட்டி அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.