டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்


டி20 கிரிக்கெட்: வங்காளதேசத்திற்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வெஸ்ட் இண்டீஸ்
x

Image Courtesy: @windiescricket

வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

சட்டோகிராம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து நடந்து டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று நடந்து வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்களாக பிரண்டன் கிங் மற்றும் அலிக் அத்தானஸ் களம் கண்டனர். இதில் பிரண்டன் 1 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஷார் ஹோப் களம் புகுந்தார். ஹோப் -அத்தானஸ் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆகினர். இதில் அலிக் அத்தானஸ் 52 ரன்னிலும், ஷாய் ஹோப் 55 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ரூதர்போட்டு ரன் எடுக்காமலும், ரோவ்மன் பவல் 3 ரன்னிலும்ம் ஹோல்டர் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 55 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆடி வருகிறது.

1 More update

Next Story