ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டலுக்கு சாப்பிட அழைத்து சென்று கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மைகோ லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் 18 வயது மாணவி படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவன், மாணவியை ஓட்டலில் சென்று சாப்பிடலாம் என்று அழைத்தார். அதை ஏற்ற மாணவியும், நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு சென்றார். அங்கு 2 பேரும் சாப்பிட்டு முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மோட்டார் சைக்கிளை வாலிபர் ஓட்டிச் சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி, எங்கே செல்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்ற நண்பர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அங்கிருந்து மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று வீட்டில் விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மைகோ லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் நண்பரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com