டெல்லி சட்டசபை தேர்தல்: முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல்: முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும் என்று ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களும், உறுப்பினர்களும் முழு பலத்துடனும் உற்சாகத்துடனும் களத்தில் இறங்க தயாராக இருக்க வேண்டும். அவர்களின் (பாஜக) பெரிய அமைப்புகள் உங்கள் ஆர்வத்திற்கு முன்னால் தோல்வியடைகின்றன. நீங்கள் எங்களின் மிகப்பெரிய பலம்.

இந்த தேர்தல் வேலை அரசியலுக்கும் துஷ்பிரயோக அரசியலுக்கும் இடையில் இருக்கும். டெல்லி மக்கள் எங்கள் வேலை அரசியலில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com