ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published on

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரு வேன் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் மாநில நெடுஞ்சாலையில் இருந்து கோகுண்டா-பின்ட்வாரா தேசிய நெடுஞ்சாலையில் நுழைந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு கனரக லாரி வேன் மீது மோதியது.

இதில் வேனில் இருந்த 13 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பெண்கள் உள்பட 5 பேர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com