நாடாளுமன்றத்தில் 15-ந்தேதி 'ராமாயணம்' திரைப்படம் சிறப்புக் காட்சி ஒளிபரப்பு

நாடாளுமன்றத்தில் வரும் 15-ந்தேதி ‘ராமாயணம்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 15-ந்தேதி 'ராமாயணம்' திரைப்படம் சிறப்புக் காட்சி ஒளிபரப்பு
Published on

புதுடெல்லி,

'ராமாயணம்: தி லெஜண்ட் ஆப் பிரின்ஸ் ராமா' என்பது 1993-ம் ஆண்டு ஜப்பான்-இந்தியா இணைந்து தயாரித்த அனிமேஷன் திரைப்படமாகும். வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 450-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் இந்திய -ஜப்பானியக் கலைஞர்கள் இணைந்து, 100,000 கையால் வரையப்பட்டன.

கீக் பிக்சர்ஸ் இந்தியா, ஏஏ பிலிம்ஸ் மற்றும் எக்செல் என்டர்டெயின்மென்ட் ஆகிய வெளியீட்டு நிறுவனங்கள் மூலம், இந்த அனிமேஷன் திரைப்படம் கடந்த ஜனவரி 24-ந்தேதி 4கே தரத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியான இந்த திரைப்படம், தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தில் வரும் 15-ந்தேதி 'ராமாயணம்' திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக பட வெளியீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமாயணம் படத்தின் சிறப்பு திரையிடல் காட்சியை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட, நாடாளுமன்ற எம்.பி.க்கள் பலர் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com