

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. தினமும் மூலவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
இந்நிலையில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதால் நேற்று (வியாழக்கிழமை) முதல் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை காலை 9 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக முருகன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.