பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து பிரியங்கா விமர்சனம்

பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது மகிழ்ச்சி. ஆனால் இதை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.
பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து பிரியங்கா விமர்சனம்
Published on

வயநாடு,

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா, தனது சொந்த தொகுதிக்கு வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாட்டில் எந்த பகுதியில் மக்களுக்கு துன்பம் நேர்ந்தாலும்,

அந்த பகுதிக்கு பிரதமர் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். ஆனால் மணிப்பூரில் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் பிரதமர் மோடி அங்கு செல்லவே இல்லை.இப்போது பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது மகிழ்ச்சி. ஆனால் இதை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவங்களும், பலர் உயிரிழந்ததும் துரதிருஷ்டவசமானது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com