அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன ஏவுகணை - டிரம்ப் சொல்கிறார்

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு அதிநவீன ஏவுகணை - டிரம்ப் சொல்கிறார்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை பாதுகாக்க ரூ.15 லட்சம் கோடி செலவில் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான கோல்டன் டோம் உருவாக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இந்தநிலையில் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும்போது, எங்களது அற்புதமான கோல்டன் டோம் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் கனடாவிடம், நீங்கள் தனி நாடாக இருந்தால் 61 பில்லியன் டாலர்கள் செலவாகும். ஆனால் நீங்கள் (கனடா) எங்கள் நாட்டின் 51-வது மாகாணமாக மாறினால் பூஜ்ஜிய டாலர்கள் செலவாகும் என்று நான் சொன்னேன். கனடா இன்னும் அதிகமாகரப்பூர்வமாக மாகாண அந்தச்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை.

அமெரிக்காவுடன் இணைந்தால் கனடாவுக்கு கோல்டன் டோம் அமைப்பை இலவசமாக வழங்குவேன் என்றார் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு கனடா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com