தினத்தந்தி
பொதுவாக, சைவ பிரியாணியில் வித்தியாசம் காட்டுவது சற்று சிரமம். இன்று கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு வைத்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி சாதம் - 1 கப், கொண்டைக்கடலை - 1 கப், உருளைக்கிழங்கு - 2 ,வெங்காயம் - 2 ,நெய் - 2 ஸ்பூன், தக்காளி சாஸ் - ½ கப், கொத்தமல்லி இலை - 1, கைப்பிடி புதினா - 1 கைப்பிடி, இஞ்சி பேஸ்ட் - 1 ஸ்பூன், மிளகாய் தூள் - 1 ஸ்பூன் ,கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன், கரம் மசாலா - 1 ஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப ஆகியவை.
செய்முறை : வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து வேக வைத்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பாசுமதி அரிசி நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும். இஞ்சி பச்சை வாசனை போனவுடன் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
எல்லாம் சேர்த்து வரும் போது உதிரியாக வடித்த சாதம் சேர்த்து 5 நிமிடம் மூடி வைத்து வேகவைத்து பரிமாறவும். சூப்பரான ஆலு சுண்டல் பிரியாணி ரெடி.