தினத்தந்தி
கூந்தல் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க சரியான பராமரிப்பு அவசியம். ஷாம்பு முதல் மசாஜ் வரை சில எளிய பழக்கங்களை பின்பற்றினால் முடி உதிர்வைக் குறைத்து, கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
குளிப்பதற்கு முன்பு தலைமுடியில் உள்ள சிக்குகளை மெதுவாக அகற்றுங்கள். உங்கள் தலைமுடி தன்மைக்கு ஏற்ற ஷாம்புவை மட்டுமே பயன்படுத்துங்கள். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்பது தவறான எண்ணம். ஷாம்புவை நன்றாக அலசி கழுவுவதும் முக்கியம்.
மருதாணி இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. எனவே மருதாணி வைத்த உடனே ஷாம்பு பயன்படுத்தாமல், அதற்கு முந்தைய நாளே ஷாம்புவால் தலைமுடியை சுத்தம் செய்து, மறுநாள் மருதாணி வைத்து வெறும் தண்ணீரில் அலசுவது சிறந்தது.
வாரத்திற்கு ஒருமுறை எண்ணெய் தடவி விரல் நுனிகளால் மெதுவாக தலைக்கு மசாஜ் செய்யுங்கள். இது தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தலைமுடி வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.