தினத்தந்தி
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது.
இந்நிலையில் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல் அணி மோதின.
இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்று 2-வது கோப்பையை கைப்பற்றியது.