இந்த ஊருக்கு தேனிலவு போங்க.. வாழ்க்கையில் மறக்கவே மாட்டீங்க!

தினத்தந்தி

மலைகள் நிறைந்த கேரளத்தில் ஆலப்புழா ஒரு தண்ணீர் தேசம். எங்கு நோக்கினும் தண்ணீர்தான். ஆஹா... `உண்மையிலேயே கடவுளின் தேசம்தான்' என மனம் நிச்சயம் ஒப்புக்கொள்ளும்.

photo: wikipedia

கேரளாவில் அரபிக் கடலோரம் அமைந்துள்ள ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாகும். "கிழக்கின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், அதன் அமைதியான உப்பங்கழிகள் (Backwaters), படகு வீடுகள் (Houseboats) மற்றும் தூய்மையான சூழலுக்கு பெயர் பெற்றது.

photo: wikipedia

உங்கள் தேனிலவின் முக்கிய அம்சமாக படகு வீட்டில் தங்கி மனம் விரும்பும் நபர்கள் அல்லது கணவன் மனைவி இருவரும் பொழுதை இனிமையாக கழிக்க நல்ல வாய்ப்பை பெற்றுத் தரும் இந்த ஆலப்புழா சுற்றுலா.

photo: wikipedia

குமரகம் பறவைகள் சரணாலயம் வேம்பநாடு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பறவைகள் காப்பகமாகும். வேம்பநாடு ஏரியின் இயற்கை அழகோடு கூடிய இந்த சரணாலயம், இயற்கையை ரசிப்பவர்களுக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் ஒரு சொர்க்கமாகும்.

photo: wikipedia

ஆலப்புழா கடற்கரை, கேரளா மற்றும் தென்னிந்தியாவின் மிக அழகான மற்றும் அமைதியான கடற்கரைகளில் ஒன்றாகும். அரபிக்கடலின் அழகிய காட்சியுடன் கூடிய, நிம்மதியை விரும்பும் இணையர்களுக்கு ஏற்ற சிறந்த சுற்றுலா தலமாகும்.

photo: wikipedia

ஆலப்புழாவின் அமைதியான படகு வீட்டில் தங்கி, உங்கள் துணையுடன் 1-2 நாட்கள் தேனிலவைக் கொண்டாடுவது ஒரு மறக்க முடியாத காதல் அனுபவமாக இருக்கும். படகிலேயே சமைக்கப்படும் உணவுகள் இங்கு மேலும் சிறப்பு.

photo: wikipedia

ஆலப்புழாவிற்கு தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது 'குட்டநாடு'வை ஒருபோதும் தவறவிடக்கூடாது. குட்டநாடு கேரளாவின் அரிசி கிண்ணம் என அழைக்கப்படுகிறது. நெல் வயல்கள், கால்வாய்கள், தென்னை மரங்கள், படகு வீடுகள் போன்றவை குட்டநாட்டிற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

photo: wikipedia
நீர்த்துப் போன சில உணவுகளை கெட்டியாக்க எளிய டிப்ஸ்!