குழந்தைகளுக்கு விருப்பமான சீரக புலாவ் செய்வது எப்படி?

தினத்தந்தி

சீரகத்தின் மணமும் சுவையும் நிறைந்த சீரக புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய எளிய உணவாகும். வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய இந்த சுவையான புலாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 1 கப், வெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, புதினா - சிறிதளவு, வெங்காயம் - 1, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக் கழுவி, 2 கப் தண்ணீரில் சுமார் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி, சிறிது வெண்ணெய் அல்லது நெய்யில் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். அது உருகியதும் சீரகத்தைப் போட்டு நன்றாகப் பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் ஊறவைத்த பாசுமதி அரிசியை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

விசில் முழுவதும் அடங்கியதும் குக்கரைத் திறந்து, முன்பு பொன்னிறமாக வறுத்த வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினாவைச் சேர்த்து மெதுவாகக் கலந்து பரிமாறவும். சுவையான சீரக புலாவ் தயார்!

வீட்டிலேயே செய்யலாம் சுவையான மஸ்கோத் அல்வா!