தினத்தந்தி
முள்ளங்கியை பச்சையாக சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. உண்மையில், முள்ளங்கி ஒரு ஆரோக்கியமான காய்கறி ஆகும் மற்றும் அதை பச்சையாக சாப்பிடுவது பல நன்மைகளை தருகிறது.
முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இது பசியை தூண்டும் தன்மை கொண்டதால் உணவு விருப்பத்தை அதிகரிக்க உதவுகிறது.
முள்ளங்கியை சாப்பிடுவதன் மூலம் உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் சீராக நடைபெறும். இந்த இரண்டு முக்கிய குணங்களுக்காகவே உலகம் முழுவதும் மக்கள் முள்ளங்கியை விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் தினமும் ஒரு கப் முள்ளங்கி சாறு குடித்து வந்தால் எரிச்சல் மற்றும் தொடர்புடைய பிரச்சினைகள் குறைய வாய்ப்பு உள்ளது.
இருமல், நெஞ்சு பிரச்சினைகள், வயிற்று உப்புசம், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு முள்ளங்கி சாறு மற்றும் தேன் கலந்து உட்கொள்வது நன்மை தரும். இதனை தினமும் மூன்று வேளை எடுத்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
சரும நோய்களுக்கு முள்ளங்கி விதைப்பசை சிறந்த மருந்தாக செயல்படுகிறது. முகப்பரு, கருப்புள்ளி, தேமல் போன்ற தோல் பிரச்சினைகளுக்கு இதை பயன்படுத்தலாம்.
முள்ளங்கியை வெள்ளரிக்காய் போல பச்சையாக சாப்பிடுவது சிறந்தது. வேக வைத்து சாப்பிட்டால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைந்து விடும்.
குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வளர முள்ளங்கிக் கிழங்குடன் அதன் கீரையையும் உணவில் சேர்க்க வேண்டும். இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.