உங்கள் துணைக்கு மன அழுத்தமா?

தினத்தந்தி

மன அழுத்தம் என்பது இன்று பலரையும் பாதிக்கும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. கவனிக்கப்படாமல் இருக்கும் மனஅழுத்தம் என்பது பெரிதாகி அதனால் குடும்ப உறவு கூட பாதிக்கப்படலாம்.

உங்கள் துணையிடம் திடீரென அதிக பரபரப்பு, சோர்வு, திடீர் அமைதி, தனிமையில் இருக்க விரும்புதல், மனதில் எரிச்சல் உணர்வு போன்றவை இருந்தால் நீங்கள் உஷாராக செயல்பட வேண்டும்.

மனம் விட்டு அக்கறையாக பேசினாலே பல பிரச்சனைகள் தீர்ந்து விடும். சிலர் சுலபத்தில் மனதில் இருப்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள். நாமாக விசாரிப்பதன் மூலம் தங்கள் மீது அன்பு செலுத்தும் துணை உள்ளது என்ற உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தலாம்.

வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலைக்கு செல்பவர்கள் விடுறை கிடைத்தால் ஓய்வு எடுக்க விரும்புவார்கள். அந்த சமயத்தில் உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் போது பயணங்கள் மேற்கொள்வது சிறந்தது.

வாரம் ஒருமுறையேனும் பக்கத்தில் இருக்கும் பூங்கா, ஷாப்பிங் மால் போன்ற இடங்களுக்கு சென்று வரலாம். அப்போது மனம் விட்டு பேசவும் நிறைய நேரம் கிடைக்கும்.குழந்தைகளை பார்க்கும் போது மனம் லேசாக மாறி உங்கள் துணையின் மனதில் நல்ல மாற்றம் ஏற்படும்.

நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து செய்ய விரும்பும் விஷயங்களை பட்டியலிடுங்கள். உடனடியாக அவர் விரும்புவதை கேட்டறிந்து அதை செய்யத் தொடங்குங்கள். உங்கள் துணையின் மனநிலையை அறிந்து கொள்ள அவரிடம் பேசுங்கள்.

அவரது வேலை, குடும்ப ரீதியான பிரச்சனைகள் அனைத்திலும் அவருக்கு துணையாக இருங்கள். கண்டிப்பாக கேலி, கிண்டல் செய்வது குறை கூறுவது ஆகியவை கூடாது. அப்படி செய்தால் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைந்து காலப்போக்கில் உங்களிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாத மனநிலை அவருக்கு உருவாகக்கூடும்.

40 வயது ஆண்களுக்கான முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்!