இந்தியாவில் பயன்படுத்தக்கூடிய மசாலா பொருட்களில் அன்னாசிப்பூவும் ஒன்று. நட்சத்திர வடிவில் இருப்பதால் இது 'நட்சத்திரப்பூ' என்றும் அழைக்கப்படுகிறது..பிரியாணிக்கு மணம், சுவை கொடுப்பதில் இதற்கு நிகர் வேறில்லை. அன்னாசிப் பூ மூலம் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது..இந்த எண்ணெய் சரும அழற்சி அனைத்தையும் தீர்க்கும்..இது ரத்த ஓட்டத்தை சீராக்கவும் மற்றும் நரம்புகளை வலுவாக்கவும் உதவும்..இப்பூவை பொடி செய்து உட்கொள்ள, செரியாமை, மாந்தம், புளித்த ஏப்பம் நீங்கும்..குழந்தைகளுக்கு இதை தேநீர் போன்று காய்ச்சி வழங்குவதால் வாந்தி, வலிப்புத் தாக்கங்கள், பிற நரம்பியல் விளைவுகளை குணப்படுத்தும்..வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தான சிகிமிக் அமிலம் அன்னாசிப் பூவில் உள்ளது..இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருளாகும். இது இதயத்தின் மென்மையான தசைகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது..Explore