இரவு விழிப்பு: உங்கள் ஆரோக்கியத்தை மெதுவாக கெடுக்கும் மறைமுக ஆபத்து!

தினத்தந்தி

இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பது ஆபத்தானது என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மனித உடலின் இயற்கை நேரச்சுழற்சியை இது பாதிக்கக்கூடும்.

இரவில் மட்டுமே சுரக்கும் மெலடோனின் என்ற முக்கிய வேதிப்பொருள், நாம் விழித்திருந்தால் சரியாக சுரக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த ஹார்மோன் தூக்கத்தையும் உடல் சமநிலையையும் கட்டுப்படுத்துகிறது.

இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா? அல்லது உங்கள் வேலை நேரம் முழுவதும் இரவில்தானா நடைபெறுகிறது? இத்தகைய பழக்கங்கள் உடல்நலத்திற்கு மெதுவாக தீங்கு விளைவிக்கலாம்.

செல்போன், கணினி, சினிமா போன்றவற்றில் முழு இரவும் மூழ்கி இருப்பதும், நண்பர்களுடன் பார்ட்டி மற்றும் அரட்டை போன்றவற்றில் நேரத்தை செலவிடுவதும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பழக்கங்களால் மெலடோனின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மூளையில் உள்ள பீனியல் சுரப்பி இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது; அது குறைந்தால் உடலின் முழுமையான ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

மேலும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து உடல் எளிதில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும். இது நீண்ட காலத்தில் பெரிய உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

இரவில் தூங்காமல் இருப்பதால் ஓய்வு பெற வேண்டிய கல்லீரல், கண்கள், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. பகலில் தூங்குவதால் உணவு பழக்கமும் சீர்குலைந்து செரிமான கோளாறுகள் உருவாகும்.

நரம்புத்தளர்ச்சி, தோல் சுருக்கம், மனஅழுத்தம், எதிர்மறை எண்ணங்கள் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். அதனால், “நாம் இரவைத் திருடினால் அது நம் ஆரோக்கியத்தைத் திருடும்” என்பதை உணர்ந்து, சரியான தூக்க பழக்கத்தை கடைபிடிப்பது அவசியம்.

பீட்ரூட் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை!