தனியாக இருக்கும்போதோ, திடீரெனவோ மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தினத்தந்தி

1. ஆழமாக மூச்சை இழுக்கவும்: பதற்றத்தை குறைக்க மெதுவாக ஆழ்மூச்சு எடுக்கலாம். இது சிகிச்சை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.

2. அமைதியாக இருக்கவும்: பதற்றமடையாமல் அமைதியாக இருப்பது சுவாசத்தை சீராக வைத்திருக்க உதவும்.

3.ஆம்புலன்ஸை அழைக்கவும்: உடனடியாக அவசர சிகிச்சைக்கு அழைக்க வேண்டும். தாங்களே வாகனம் ஓட்டிச் செல்லக்கூடாது.

4.ஆஸ்பிரின்: மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே, பொருத்தமான நிலையில் ஆஸ்பிரின் எடுத்துக்கொள்ளலாம். ரத்தப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

5.சிகிச்சையில் தாமதம் வேண்டாம்: ரத்த ஓட்டம் தடைபட்டால் இதயத் தசை விரைவாக பாதிக்கப்படும். எனவே உடனடி சிகிச்சை அவசியம்.

6. உடற்பயிற்சி: இதய ஆரோக்கியத்திற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது நல்லது.

7. சர்க்கரை, ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

8. ஆரோக்கியமான உணவு: சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு, உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்க வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவும்.

மாத்திரைகளை டீ, காபியில் போட்டு விழுங்கினால் என்னவாகும் தெரியுமா?