freepik
freepik

புளி அதிகம் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

Published on
புளிப்புப் உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, பல பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
புளியை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக உட்கொள்வதால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவில் வீழ்ச்சியை உண்டாக்க செய்யும்.
புளி அமிலத்தன்மை கொண்டது. அதனால் வழக்கமான நுகர்வை காட்டிலும் அதிகமாக எடுக்கும் போது, அது பற்களை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
அதிகளவு புளிப்பு தன்மை பித்தப்பையில் கற்கள் உருவாவதை ஊக்குவிக்க செய்யக்கூடும்.
இரைப்பை குழாய் பிரச்சினை, செரிமான பிரச்சினையை கொண்டிருந்தால் அவர்கள் புளியிலிருந்து ஓரளவு விலகி இருப்பது நல்லது. இல்லையெனில் அமிலத்தன்மை அதிகரிக்க செய்யும்.
அதிகமான புளி சேர்த்த உணவு, வாந்தி பிரச்சினை, மயக்க உணர்வு, மூச்சுத்திணறல் போன்ற பல அறிகுறிகளை உண்டாக்க செய்யலாம்.
அதிக புளி சேர்க்கும் போது, இவை ரத்த நாளங்களை சுருக்கும் செயல்முறையை அதிகரிக்க செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் மெதுவாகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com