குறைந்த பட்ஜெட் : கடலூரில் கண்டுகளிக்க இப்படி ஒரு இடமா?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே உள்ளது பிச்சாவரம் சுற்றுலா மையம்.
5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட மாங்குரோவ் என்னும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளது.
இங்கு விடுமுறை காலங்கள், பண்டிகை கால விடுமுறை, வார விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து மகிழ்வார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலாத்துறை மூலம் இயக்கப்படும் படகுகளில் சவாரி செய்து, சதுப்பு நிலக்காடுகளை கண்டு ரசிக்கலாம்.
சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக உறவினர்களுடன் வந்து உயர் கோபுரத்தில் ஏறி பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் அழகை கண்டு ரசிக்கலாம்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் திண்பண்டங்களை அங்குள்ள பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழலாம்.
ஆண்டுதோறும் பிச்சாவரம் சதுப்பு நிலத்திற்கு மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மூன்று மாதங்கள் வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகிறது. இதனை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.