செய்முறை : கேரட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
பட்டர்பீன்ஸ், கேரட் இரண்டையும் வேக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள பட்டர்பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறிய பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான பட்டர்பீன்ஸ் - கேரட் பொரியல் ரெடி.