பொங்கல் ஸ்பெஷல்: தித்திப்பான சர்க்கரை பொங்கல்.!

தை மாதம் முதல் நாளான (நாளை) பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் : அரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 2 டேபுள் ஸ்பூன், பால் - 1 கப், வெல்லம் - 3/4 கப், நெய் - 100 கிரா,ம் முந்திரிப்பருப்பு - தேவையான அளவு, காய்ந்த திராட்சை - தேவையான அளவு' ஏலக்காய் - 1/2ஸ்பூன் ஆகியவை.
செய்முறை : முதலில் வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
பின்னர் அரிசியையும், பருப்பையும் நன்றாக கழுவி 4 கப் நீர் ஊற்றி குழைய வேக விட வேண்டும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அந்த பாலை அரிசி, பருப்பு கலவையில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி விடவும்.
அடுத்து அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் முந்திரிப்பருப்புயும், காய்ந்த திராட்சையும் பொன் நிறத்தில் வறுத்து பொங்கலில் கொட்டி கிளறவும்.
திக்கான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து சூடாக பரிமாறவும். சூப்பரான சர்க்கரை பொங்கல் ரெடி.
Explore