செய்முறை : கொள்ளுவை 10 மணி நேரம் ஊறவைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கொள்ளு, அரிசி இரண்டையும் நன்றாக கழுவி தனித்தனியே தளர வேகவிடவும்.
வெந்த கொள்ளு, அரிசியை ஒன்றாக சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளு கலவையில் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
சூப்பரான கொள்ளு காரப் பொங்கல் ரெடி. கொள்ளுவில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ரெசிபியை சாப்பிடலாம்.