all pic using freepik
all pic using freepik

மெச்சுராக பேசுங்கள்..வாழ்க்கை மாறும்!

Published on
பேசும் பக்குவம் என்பது. ஒருவர் பேசுவதை நிதானமாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டும் பேசுவதைக் குறிக்கும்.
பேசும் பக்குவம் ஒருவருக்கு இருந்தால், அவர் சமூகத்தில் நல்ல உறவுகளைப் பேணவும், மற்றவர்களிடம் எளிதில் பழகவும் முடியும். அவர்கள் எடுக்கும் முடிவுகளிலும், செயல்களிலும் நிதானம் இருக்கும்.
பேசும் பக்குவத்தைப் பெற. ஒருவர் தன்னைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அனுபவங்கள், படிப்பினைகள் மூலம் இவற்றைக் கற்றுக்கொள்வது அவசியம். இது ஒருவரிடம் காணப்படும் முதிர்ச்சியையும், சமூக அறிவையும் வெளிப்படுத்தும்.
வேகமாக பேசுவதைத் தவிர்த்து, வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. எங்கு, யாருடன், என்ன பேச வேண்டும் என்பதை உணர்ந்து பேசுவது.
ஒருவரின் மன வருத்தத்துக்கு காரணமாகாமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேசுவது.
பெரியவர்கள் மற்றும் சக மனிதர்களிடம் மரியாதையுடன் பேசுவது. தான் பேசுவதன் விளைவுகளை அறிந்து பேசுவது.
பொய் பேசுவதைத் தவிர்த்து, உண்மையுடன் பேசுவது. எதையும் மறைக்காமல், வெளிப்படையாக பேசுவது. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்முகத்துடன் பேசுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com